கடந்த 2022- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26- ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டது AI 102 என்ற ஏர் இந்தியா விமானம். அப்போது, நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் மதிய உணவுக்குப் பிறகு, பயணிகள் உறங்குவதற்கு ஏதுவாக விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தது.
“என் வழி தனி வழி” லாரி ஓட்டுனரின் அலட்சியம்! – காணாமல்போன Benz காரின் கதவுகள்!
இந்த நிலையில், விமானத்தில் வணிக வகுப்பில் பயணித்த பெண் பயணி ஒருவர் மீது குடிபோதையில் இருந்த மற்றொரு பயணி சிறுநீர் கழித்துள்ளார். இதைக் கண்ட சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து, விமான ஊழியர்களிடம் தெரிவித்தனர். பின்னர், விமான ஊழியர்கள் அந்த போதை பயணியை அங்கிருந்து இருக்கை செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் பயணிக்கு மாற்று உடை மற்றும் காலணியைத் தந்த ஊழியர்கள் வேறு இருக்கைகள் எதுவும் காலியாக இல்லாததால், அதே இருக்கையில் அமர வைத்தனர். விமானம் டெல்லியில் தரையிறங்கிய போது, எதுவும் நடக்காதது போன்று அந்த குடிபோதையில் இருந்த பயணி அங்கிருந்து சென்றுவிட்டார்.
சிங்கப்பூரா? தாய்லாந்தா? – கடும்போட்டி நிலவுகிறதா! ஏன் தெரியுமா?
டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு பாதிக்கப்பட்ட பெண் பயணி கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, அந்த போதை ஆசாமி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், சம்மந்தப்பட்ட நபரை 30 நாட்களுக்கு விமானத்தில் பயணிக்கத் தடை விதித்துள்ளது.
அதேபோல், இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை அளிக்கும்படி, ஏர் இந்தியா நிறுவனத்திடம் கோரியுள்ளது சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்.