தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் சிங்கப்பூருக்கு குடியேறவுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
நடிப்புகளை ஓரம் கட்டிவைத்து விட்டு, சிங்கப்பூரில் முழுமையாக குடியேறுவதே இவரின் நீண்ட கால திட்டம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி அஜித் குமார் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
எதையும் சட்டப்படி முறையாக எதிர்கொள்பவர் அஜித், ஆகவே அவர் முறையாக சட்டத் திட்டங்களை பின்பற்றும் சிங்கப்பூருக்கு குடியேற உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வலிமை படம் சமீபத்தில் தான் வெளியாகி மெகா ஹிட் ஆனது, அதை தொடர்ந்து மற்றொரு படத்திலும் நடிக்க அஜித் ஒப்பந்தம் செய்துள்ளார்.