பயங்கர சாலை விபத்தில் உயிரிழந்த ஆடவர்; நேரில் கண்டவர்களிடம் வீடியோ ஆதாரம் தேடும் உறவினர்கள்

accident-appeal-witness-bukit-batok-ave-5
Google Maps, Manje Daus/Facebook

சிங்கப்பூரில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர் தொடர்பான நேரடி சாட்சிகளை பெண் ஒருவர் தேடி வருகிறார்.

கடந்த ஜூலை 28 வியாழன் அன்று இரவு 7 மணி முதல் 7:30 மணி வரை நடந்த அந்த விபத்தை நேரில் கண்ட சாட்சிகளை தேடி அவர் பேஸ்புக்கில் முறையிட்டுள்ளார்.

சிங்கப்பூர் to சென்னை… கேட்பாரற்று கிடந்த பார்சல் – பயணியை தேடும் போலீஸ்!

இந்த விபத்து பிரிக்லேண்ட் சாலையை நோக்கி செல்லும் புக்கிட் பாத்தோக் அவென்யூ 5ல் நடந்தது.

விபத்தில் சம்மந்தப்பட்ட வாகனங்கள்; Aprilla RSV4 கருப்பு மோட்டார் பைக் – எண் FBJ5070M மற்றும் வெள்ளை நிற Fuso மினி-பஸ்.

“விபத்து எனது மருமகனின் உயிரைப் பறித்துவிட்டது” என மஞ்சே தாஸ் என்ற அந்த பெண் ஆகஸ்ட் 3 அன்று பதிவில் பேஸ்புக் குறிப்பிட்டார்.

அவாங் முஹம்மது ஷாருல் பின் அவாங் அவாரி என்ற (Awang Muhammad Shahrul Bin Awang Awarie) அவரின் 25 வயது மருமகன் இந்த விபத்தில் உயிரிழந்ததாக தாஸ் மதர்ஷிப்புடன் பகிர்ந்து கொண்டார்.

கேமராவில் பதிவான விபத்தின் எந்த காட்சியாக இருந்தாலும் எங்களிடம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த காட்சிகள் விசாரணைகளுக்கு உதவுவதோடு, குடும்பத்தின் இழப்பை ஈடுகட்டவும் உதவும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆடவர்… CCTV காட்சிகளை வைத்து தூக்கிய போலீஸ்