14 வயதுக்குட்பட்ட சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட 57 வயதுமிக்க ஆடவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) கைது செய்யப்பட்டார்.
தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 45க்கு அருகில் உள்ள லிப்டில் இருந்த சிறுமியிடம் அடையாளம் தெரியாத அந்த நபர் தவறாக நடந்துகொண்டதாக அன்று மதியம் 2.55 மணிக்கு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
சிங்கப்பூரில் 12 வயது சிறுவனை இரு நாட்களாக காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள் வாசகர்களே!
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சிசிடிவி மற்றும் போலீஸ் கேமராக்களின் உதவியுடன், பெடோக் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அவரை கண்டறிந்தனர்.
புகார் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
அந்த நபர் மீது நேற்று (ஆகஸ்ட் 3) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்குதல்… CCTV மூலம் சிக்கிய இளைஞர் – அதிரடியாக கைது செய்த போலீஸ்