சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை மாதந்தோறும் விநியோகிக்க, ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கமும் (United Indian Muslim Association) Food Bank Singapore எனும் அறநிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
Amitabha Association of Singapore-இன் ஆதரவில் அரிசி, எண்ணெய், பால்மாவு, சுகாதாரப் பொருள்கள் போன்றவை விநியோகிக்கப்படும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 753 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!
தோ பாயோ (Toa Payoh), யீஷூன் (Yishun), அங் மோ கியோ (Ang Mo Kio), சாய் சீ- ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த வசதிகுறைந்தவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
கிருமித்தொற்றால் உருவாகியுள்ள நிச்சயமற்ற சூழலில், சிலர் வேலைகளை இழந்துள்ளனர்.
குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கும் ஆதரவளிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 5 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது – MOH..!