ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிங்கப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் நள்ளிரவு 12.00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் விழா தொடங்கி நடைபெற்றது.
2024 தொடக்கத்திலேயே கோடீஸ்வரனாகும் வாய்ப்பு.. சிங்கப்பூர் TOTO லாட்டரி அசத்தல் அறிவிப்பு
நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய சுவாமிகளுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், அரிசி மாவு உள்ளிட்டவைகளால் விடிய விடிய அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நடராஜர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும், மஹா தீபாராதனைகளும் நடைபெற்றது.
சிங்கப்பூரில் புதிய வகை பர்கர்களை அறிமுகப்படுத்தும் மெக்டொனால்ட்ஸ்!
பின்னர், நடராஜர் உற்சவர் அம்பாளுடன் கோயில் வளாகத்தில் மேளதாளங்களுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில், 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.