அக்டோபர் 23- ஆம் தேதி அன்று ஆயுதபூஜை மற்றும் நவராத்திரி விழாவின் 9-வது நாளையொட்டி, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில், ஸ்ரீ சிவன் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குறிப்பாக, ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. அதேபோல், அம்மன் உற்சவர் சிலைக்கு ஸ்ரீ சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், ஸ்ரீ சிவன் கோயிலிலும் உற்சவருக்கு ஸ்ரீ சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலும், அம்மனுக்கு ஸ்ரீ சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.
கார் தீ விபத்து.. கருகிய நிலையில் உடல் கண்டெடுப்பு
பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.