Bedok Reservoir சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 21) பாதசாரி ஒருவர் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது.
பிளாக் 632 Bedok Reservoir சாலையில் நடந்த இந்த விபத்து குறித்து காலை 11.24 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய 79 வயதான முதியவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தி கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய 26 வயதான வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
விபத்து தொடர்பான புகைப்படத்தை ஸ்டாம்பர் மெல்வின் பகிர்ந்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட முதியவர் சாலையில் கிடப்பதைக் காணலாம்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
பெரிய மரம் விழுந்த சம்பவம்: விபத்தில் சிக்கிய அந்த 3 பேரின் நிலை என்ன?