பெண்ணை அடித்து தாக்கி S$3,000 ரொக்கம் கொள்ளை – அதே நாளில் ஆடவர் கைது

bedok-robbery man arrested
SPF

சிங்கப்பூரில் கொள்ளை சம்பவம் தொடர்பில் 36 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெடோக் நார்த் ஸ்ட்ரீட்2 க்கு அருகில் 45 வயது பெண்ணிடம் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படும் அவர் சிங்கப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிழைக்க வந்த இடத்தில் வீண் வேலை – இந்தியருக்கு சிறை தண்டனை

இந்த சம்பவம் நேற்றைய தினம் (செப்.14) காலை 11:50 மணியளவில் நடந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், அந்த ஆடவர் சுமார் S$3,000 ரொக்கம் மற்றும் பெண்ணின் அடையாள ஆவணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு அந்த பெண்ணை ஆடவர் தாக்கியதாகவும் போலீஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்த போலீசார், அதே நாளில் பிற்பகல் 2:20 மணிக்கு லோரோங் 4 கெய்லாங்கில் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் S$2,800 பணம் மீட்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், மேலும் 12 பிரம்படிகளுக்கு குறையாமலும் வழங்கப்படலாம்.

போலீசை கண்டு ஓட்டம் – டேசர் துப்பாக்கியுடன் வளைத்து பிடித்த போலீசார்: சிங்கப்பூரில் வைரலாகும் வீடியோ