சிங்கப்பூரில் கொள்ளை சம்பவம் தொடர்பில் 36 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெடோக் நார்த் ஸ்ட்ரீட்2 க்கு அருகில் 45 வயது பெண்ணிடம் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படும் அவர் சிங்கப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிழைக்க வந்த இடத்தில் வீண் வேலை – இந்தியருக்கு சிறை தண்டனை
இந்த சம்பவம் நேற்றைய தினம் (செப்.14) காலை 11:50 மணியளவில் நடந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அந்த ஆடவர் சுமார் S$3,000 ரொக்கம் மற்றும் பெண்ணின் அடையாள ஆவணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதற்கு முன்பு அந்த பெண்ணை ஆடவர் தாக்கியதாகவும் போலீஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்த போலீசார், அதே நாளில் பிற்பகல் 2:20 மணிக்கு லோரோங் 4 கெய்லாங்கில் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் S$2,800 பணம் மீட்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், மேலும் 12 பிரம்படிகளுக்கு குறையாமலும் வழங்கப்படலாம்.
போலீசை கண்டு ஓட்டம் – டேசர் துப்பாக்கியுடன் வளைத்து பிடித்த போலீசார்: சிங்கப்பூரில் வைரலாகும் வீடியோ