இருவகை திறன் கொண்ட தடுப்பூசி: 18 முதல் 49 வயதினருக்கு… நவ.7 முதல் – ரெடியா இருங்க

Photo: Getty

சிங்கப்பூரில் Bivalent மாடர்னா/ஸ்பைக்வாக்ஸ் தடுப்பூசி நவம்பர் 7 முதல் போடப்படும் என சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

அதாவது 18 முதல் 49 வயதுடையவர்களுக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இலவச ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கருவிகள் – நவ.21 முதல் வழங்கப்படும்

இதற்கு தகுதியான நபர்களுக்கு முன்பதிவு இணைப்புடன் கூடிய SMS ஒன்று அனுப்பப்படும் என்பதையும் MOH கூறியுள்ளது.

முதலில் 40 முதல் 49 வயதிற்குட்பட்டவர்களை அமைச்சகம் அழைக்கும், பின்னர் படிப்படியாக கிழ்கண்ட வயதினருக்கு அழைப்பு விடுக்கும்.

அமைச்சகத்தின் கூட்டுப் பரிசோதனை மற்றும் தடுப்பூசி நிலையங்களில் (JTVCs) தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துகொள்ளுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையத்தில் கசிந்த பெண்களின் தவறான புகைப்படத்தை வைத்து மிரட்டல் விடுத்த ஆடவருக்கு சிறை