அங் மோ கியோவில் உள்ள பிளாட்டில் 60 வயது முதியவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இன்று (டிச.29) வெள்ளிக்கிழமை காலை 7:30 மணியளவில், பிளாக் 208 ஆங் மோ கியோ அவென்யூ 1இல் உள்ள வீட்டில் அந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுத்து, தலா S$500 கமிஷனுக்கு மலேசியா அனுப்பிவைத்த ஏஜென்சி பெண்
முதியவர் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 அன்று தனது சைக்கிளில் சென்றதைக் கடைசியாகப் பார்த்ததாக அவரின் பக்கத்து வீட்டுக்காரர் ஷின் மின் நியூஸிடம் கூறினார்.
இன்று காலை 11.40 மணியளவில் முதியவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.
இயற்கைக்கு மாறான மரணம் குறித்து இன்று காலை 7:30 மணியளவில் தகவல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, போலீசார் சென்று பார்த்தபோது 60 வயது முதியவர் ஒருவர் வீட்டில் சுயநினைவின்றி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் இறந்ததும் உறுதி செய்யப்பட்டது.
சிதைந்த நிலையில் இருந்த சடலத்தில் துர்நாற்றம் வீசுவதும் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின்படி, இதில் சதிச்செயல் ஏதும் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கவில்லை.
சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி