சமையலறை ஜன்னலுக்கு வெளியே 29 வயது பெண்ணின் சடலம் – பணிப்பெண்ணா? நெட்டிசன்கள் கமெண்ட்

சமையலறை ஜன்னலுக்கு வெளியே 29 வயது பெண்ணின் சடலம் - பணிப்பெண்ணா? நெட்டிசன்கள் கமெண்ட்

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் சமையலறை ஜன்னலுக்கு வெளியே 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று செப்.25 அன்று காலை 6:20 மணியளவில், பிளாக் 104 புக்கிட் பாடோக் சென்ட்ரலின் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு முதல் தகர்ப்பு: பலத்த சத்தம்… சிதறிய பறவைகள்

வலைத்தளங்களில் பரவிய காணொளியில், அவர் ஒரு பணிப்பெண் என்று சிலர் ஊகித்து கருத்து கூறுகின்றனர்.

மேற்கண்ட முகவரியின் சமையலறை ஜன்னலுக்கு வெளியே அவர் தொங்கியதைக் கண்டதாகக் SCDF கூறியது.

அதன் பின்னர், அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது.

இறந்தவர் 29 வயதான பெண் என்பதும், இது இயற்கைக்கு மாறான மரணம் என்றும் போலீசார் வகைப்படுத்தினர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சதிச் செயல் ஏதும் நடந்ததாக போலீசார் சந்தேகிக்கவில்லை.

விசாரணைகள் நடந்து வருகிறது.

உலகப் போர் வெடிகுண்டு: 4000 பேர் பாதிப்பு – பேருந்து நிறுத்தங்கள் மூடல்