பலத்த சத்தத்துடன் கீழே விழுந்த ஆடவர் – சம்பவ இடத்திலேயே மரணம்

bukit panjang death
Koh

புக்கிட் பஞ்சாங் ரிங் ரோட்டில் உள்ள பிளாக் 235 இல் இருந்து கீழே விழுந்த 33 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் ஜூலை 13 அன்று மதியம் 12.50 மணியளவில் நடந்த இயற்கைக்கு மாறான இந்த மரணம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சிங்கப்பூரில் மேலும் ஒரு இந்திய ஊழியர் மரணம் – சாங்கி ஈஸ்ட் கட்டுமான தளத்தில் விபத்து

அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மதியம் 12:45 மணியளவில் பிளாக்கில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறினர்.

அதன் பின்னர் சோதித்தில் பிளாக் 235 க்கு முன்னால் உள்ள புல்வெளியில் ஒருவர் அசையாமல் கிடந்ததை அங்கு வசிப்பவர் ஒருவர் கண்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், மரணத்தில் முறைகேடு நடந்ததாக சந்தேகிக்கவில்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“உழைப்புக்கு ஏற்ற கூலி முக்கியம்ங்க..” – கடமைக்கு வேலை செய்யும் ஊழியர்கள் சிங்கப்பூரில் தான் அதிகமாம்