விபத்தில் சிக்கிய இருவர் மருத்துவமனையில்.. ஓட்டுனரை பிடித்து போலீஸ் விசாரணை

car accident toa payoh police investigating
Shin Min Daily News & Google Maps

தோ பாயோ லோரோங் 8 இல் நேற்று (அக்.11) காலை ஏற்பட்ட விபத்தில் வயதானோர் இருவர் காயமடைந்தனர்.

76 மற்றும் 83 வயதுடைய இரண்டு ஆடவர்களும் மயக்க நிலையில் டான் டோக் செங்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ரயில் நிலைய ஊழியரோடு சண்டை.. வெளிநாட்டு ஊழியருக்கு அபாரதம், சிறை

84 வயதுமிக்க இன்னொரு ஆடவர் விசாரணைகளுக்கு உதவி வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தோ பாயோ லோரோங் 8 இல் உள்ள சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்திற்கு அருகிலுள்ள சாலையில் நடந்தது.

துணை மருத்துவர்கள் இருவர், பாதிக்கப்பட்ட இருவருக்கும் CPR சிகிச்சை செய்வதை காணொளியில் காண முடிந்தது.

இந்த சம்பவம் குறித்து புதன்கிழமை காலை 8 மணியளவில் தங்களுக்கு தகவல் வந்ததாக சிங்கப்பூர் போலீஸ் படை உறுதிப்படுத்தியது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

10வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்..