மரத்தில் கார் மோதி விபத்து (காணொளி )- குழந்தை உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

SG Road Vigilante Facebook

நேற்று முன்தினம் (ஆக. 30) மாலை 4:01 மணியளவில், ரிவர் வேலி க்ளோஸ் நோக்கி செல்லும், ராபர்ட்சன் கீயில் (Robertson Quay) கார் விபத்துக்குள்ளானது குறித்து தகவல் விடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கார் மோதியதில் மரம் விழுந்து, சிதறிக் கிடந்த கிளைகளையும் அந்த சம்பவத்தின் காணொளி மூலம் காணமுடிகிறது.

நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆடவர் – இறந்த நிலையில் கண்டெடுப்பு

மேலும், விழுந்த மரக் கிளைகளால் சிலர் காயமடைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் 65 வயதான பெண் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 36 மற்றும் 43 வயதுடைய இரண்டு பெண்களும், நான்கு வயது சிறுமியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணைக்கு ஓட்டுநர் உதவி வருகிறார்.

இந்தியர்களை குறிவைத்து இனவாதம் நிகழ்த்தப்பட இரு காரணங்கள் இருக்கலாம் – பிரதமர் லீ