விபத்து: தலைகுப்புற கவிழ்ந்த கார் (காணொளி) – சிறுவன் உள்ளிட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி

அப்பர் செராங்கூன் சாலை மற்றும் பார்ட்லி சாலை சந்திப்பில் நவம்பர் 25 அன்று நடந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பயணி காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தின் காணொளி SG Road Vigilante என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.

டிசம்பர் முதல் வழக்கமான சர்வதேச விமானங்களுக்கு இந்தியா அனுமதி – சிங்கப்பூருக்கு கட்டுப்பாடு

இந்த விபத்து அப்பர் செராங்கூன் சாலையில் உள்ள நான்கு வழிச்சாலையில் மூன்று வழியை ஆக்கிரமித்தது. சம்பவ இடத்தில் போலீசார் ஆரஞ்சு நிற கூம்புகளை அமைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

கடந்த நவம்பர் 25 அன்று மாலை 4:14 மணியளவில் அப்பர் செராங்கூன் சாலை மற்றும் பார்ட்லி சாலை சந்திப்பில் இரண்டு கார்களுக்கு இடையே விபத்து ஏற்பட்டதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது 46 வயது ஆண் ஓட்டுனர் மற்றும் 11 வயது பயணி சுயநினைவுடன் இருந்தனர்.

இது தொடர்பான போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

தள்ளுபடியில் விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்கலாம்.. எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!!