சாங்கி ஏர்போர்ட்டில் உள்ள கடையில் இருந்து இரண்டு பணப்பைகளைத் (wallets) திருடியதாகக் கூறப்படும் பெண் ஒருவர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு திருடிய அந்த பெண், பிப்ரவரி 26 அன்று சிங்கப்பூர் திரும்பியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
2018 ஜூன் 25 அன்று, விமான நிலையத்தின் பயணிகள் பகுதியில் அமைந்துள்ள கடையில் இருந்து $800க்கும் அதிக மதிப்புள்ள இரண்டு பணப்பைகள் காணாமல் போனது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சிசிடிவி உதவியுடன், அந்த பெண்ணின் அடையாளத்தை விமான நிலைய போலீஸ் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்தனர்.
ஆனால், குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படும் அந்த பெண் சிங்கப்பூரை விட்டு வெளியேறியதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26 அன்று சிங்கப்பூர் திரும்பியபோது அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது”