‘சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 2- லிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் புறப்படும் என அறிவிப்பு!’

Photo: Air India Express Official Twitter Page

இந்தியாவில் முன்னணி விமான நிறுவனங்களின் ஒன்றான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: திக் திக் நிமிடங்கள் – பயணி ஒருவர் கைது

இந்த நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சிங்கப்பூரில் இருந்து பயணிக்கும் விருந்தினர்களுக்கான முக்கியமான அறிவிப்பு. வரும் அக்டோபர் 18- ஆம் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் அனைத்தும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 1- க்கு (Terminal 1) பதிலாக டெர்மினல் 2- லிருந்து (Terminal 2) புறப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo: Air India Express Official Twitter Page

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சிங்கப்பூர் பிரதமர்!

எனவே, சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் மூலம் இந்தியா திரும்பவுள்ள பயணிகள் அனைவரும் விமான நிலையத்தின் டெர்மினல் 2- க்கு சென்று விமானங்களில் ஏறி பயணிக்கலாம்.