100 இளைஞர்கள் ஒன்றாக கூடியிருந்த சாங்கியில் உள்ள சாலட்டில் (Changi chalet) 15 வயது சிறுமியை மற்ற நான்கு சிறுமிகள் தாக்கியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் காணொளிகள் ஆன்லைனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இயந்திரத்தில் தலை சிக்கி மரணித்த வெளிநாட்டு ஊழியர் – இயந்திரத்தை பராமரிக்கவில்லை என்பதே உண்மை…
காணொளிகள் வெளியானதை அடுத்து, 14 முதல் 15 வயதுக்குட்பட்ட அந்த நான்கு இளையர்களும் போலீஸ் விசாரணைகளுக்கு உதவி வருகிறார்கள்.
இச்சம்பவம் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி அன்று (வெள்ளிக்கிழமை) CSC@Changi 2 இல் நடந்தது.
மேலும், அன்று இரவு 10.15 மணியளவில் இந்த சண்டை நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர்.
வெளியான காணொளிகளில், சண்டையைப் பார்க்க தலா S$25 செலுத்தியதாக அங்கு வந்தவர்களில் ஒருவர் கூறுவதைக் கேட்க முடிந்தது.
அங்கு 100 பேர் கூடியிருந்ததாகவும், இதில் கலந்து கொள்ள சிறுவர்கள் தலா S$25 வெள்ளியும், சிறுமிகள் தலா S$10 வெள்ளியும் செலுத்தியது தெரியவந்தது.
ஆனால் அங்குள்ள பெரிய அறையின் அதிகபட்ச 50 பேருக்கு தான் அனுமதி என்று சாலட் அதிகாரபூர்வமாகவும் கூறியுள்ளது.
அன்றிரவு மதுபானம் விநியோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதாகவும் ஷின் மின் கூறியுள்ளது.
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டு ஊழியர்கள் இருவர் கைது