சிங்கப்பூரில் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் சாங்கி ஜுவல் மால்.!

Changi Jewel reopen today

சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்தில் நூறுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, சாங்கி ஜுவல் (Changi Jewel) மால் மூடப்பட்டது.

இந்நிலையில், சாங்கி ஜுவல் மால் ஒரு மாத காலத்திற்கு பின்னர் இன்று‌ (14-06-2021) மீண்டும் திறக்கப்படுகிறது. அங்குள்ள சில்லறை விற்பனை, உணவு பானக் கடைகள் அனைத்தும் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

சாங்கி ஜுவல் மாலில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் மட்டும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. கோவிட்-19 நிலவரத்தைப் பொருத்து இன்னும் ஒரு வாரத்தில் உணவு பானக்கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கலாம்.

புக்கிட் மேரா வியூ சந்தை இன்று முதல் தற்காலிகமாக மூடல்.!

சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் முனையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. ஊழியர்கள், பயணிகள், பொதுமக்கள் அனைவரும் விமான நிலையத்தில் நடப்பில் இருக்கும் புதிய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பாக நடந்துகொள்ள இது உதவும்.

கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் அபாயமுள்ள ஊழியர்கள், 7 நாட்களுக்கு ஒருமுறை வழக்கமான PCR பரிசோதனைகளைச் செய்து கொள்ளவேண்டும் என்றும், ART பரிசோதனைகளுக்கும் அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்தில் கடந்த மாதம் 20ம் தேதி முதல் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை.

கட்டுமான இடத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த நபர்!