சிங்கப்பூர் மற்றும் சென்னை இடையே தினசரி விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஸ்கூட் அறிவித்துள்ளது.
பயணிகள் வரும் நவ.5 முதல் இரு வழித்தடங்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டினருக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை
சென்னை-சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை வரும் நவ.5 முதல் தொடங்கும் என ஸ்கூட் நிறுவன பொது மேலாளர் பிரையன் டோரே கூறினார்.
பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில், சிறந்த மற்றும் தனித்துவமான பயண சேவையை வழங்குவதே இதன் நோக்கம் என அவர் விளக்கினார்.
ஒரே நேரத்தில் 182 பேர் வரை பயணம் செய்யும் திறன்கொண்ட இந்த விமான சேவை, இரு பகுதியின் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த விமானம் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நள்ளிரவு 12:35 மணிக்கு புறப்படும்.
மேலும் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இரவு 10.20 மணிக்கு புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சம்பளத்தை உயர்த்த 72 சதவீத முதலாளிகள் திட்டம் – ஆய்வு