சென்னையில் இருந்து சிங்கப்பூர் பறக்கவிருந்த விமானத்தில் கோளாறு..!

சென்னையில் இருந்து சிங்கப்பூர் வர இருந்த ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 200 பேருடன் பறக்கவிருந்த அந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு விமானியால் கண்டுபிடிக்கப்பட்டது. அது சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகள், பணியிடை மாற்றம் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள்!

அதனை அடுத்து, விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமான சோதனை பொறியாளர்கள் உடனே வந்து விமானத்தை சொத்தித்தனர்.

அந்த சோதனை தொடர்ந்துகொண்டே சென்றதால், விமானத்தில் இருந்த பயணிகள் விரக்தியில் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து விமானம் சரிசெய்யப்படாத காரணத்தால் பயணிகள் அனைவரும் நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் “ரோபோகால்” அழைப்பு மோசடிகள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…