China coronavirus death: சீனாவின் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) நாடு தழுவிய நிலவரப்படி, புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,016 ஆக உயர்ந்துள்ளது. இதில் 108 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, இதில் ஹூபே மாகாணத்தில் மட்டும் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
மற்ற இறப்புகள் ஹிலோங்ஜியாங், அன்ஹுய் மற்றும் ஹெனான் மாகாணங்களிலும், மேலும் தியான்ஜின் மற்றும் பெய்ஜிங் நகரங்களிலும் நடந்ததாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : செர்டிஸ் சிஸ்கோ ஊழியர் உட்பட சிங்கப்பூரில் 2 புதிய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் உறுதி..!
நேற்று திங்களன்று 2,478 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பங்கள் இருந்ததாக ஆணைக்குழு தெரிவித்திருந்தது, அதற்கு முந்தைய நாளில் 3,062 ஆக இருந்தது, தற்போது ஆகமொத்தம் 42,638 ஆகக் உயர்ந்துள்ளது.
ஹூபே மாகாணத்தில் பதிவான 2,097 புதிய சம்பவங்களும் இதில் அடங்கும், டிசம்பர் மாதத்தில் நோய் பரவல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரை பொறுத்தவரை…
- பாதிக்கப்பட்டோர் – 45
- பாதிக்கப்பட்டதாக சந்தேகம் – 628
- கிருமித்தொற்று இல்லையென ரத்தப் பரிசோதனையில் உறுதியான நபர்கள் – 589
இதையும் படிங்க : சிங்கப்பூருக்கான பயணத் திட்டங்களை தாமதப்படுத்துமாறு குடிமக்களை வலியுறுத்திய இரு நாடுகள்..!