ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி பூஜை நடைபெறும் என அறிவிப்பு!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயிலில் வரும் மே 5- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சித்ரா பௌர்ணமி பூஜை (Chitra Pournami Prayers) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அறிவித்துள்ளது.

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்- விமான நிலையத்தை அதிர வைத்த பெண்!

மே 5- ஆம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 07.15 மணிக்கு உபய பூஜையும், இரவு 07.30 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 08.30 மணிக்கு பௌர்ணமி பால்குட அபிஷேகமும் நடைபெறவுள்ளது.

பௌர்ணமி பால்குட அபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ள இந்து அறக்கட்டளை வாரியம், அதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62234064 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.