கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் களைகட்டியுள்ளது.
அந்த வகையில், சிங்கப்பூரில் அரசு சாரா அமைப்பான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மையம் (Migrant Workers’ Centre) என்றழைக்கப்படும் ‘MWC’ வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வரும் டிசம்பர் 25- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
‘வைகுண்ட ஏகாதசி விழா 2023’- ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!
சிங்கப்பூரின் 51 சூன் லீ சாலையில் (51 Soon Lee Road) உள்ள ‘MWC RECREATION CLUB’- ல் டிசம்பர் 25- ஆம் தேதி அன்று இரவு 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மற்றும் போட்டிகள், நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறும் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.