கொடூரமாக சண்டையிட்டு கொண்ட இருவர்: வலைத்தளங்களில் வைரலான வீடியோ – நெட்டிசன்கள் அதிருப்தி

பீச் ரோட்டில் உள்ள சிட்டி கேட்டில் அமைந்துள்ள உணவுக் கடைக்குள் ஒருவர் மற்றொருவரை தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த அடிதடி சம்பவம் நேற்று முன்தினம் பிப்ரவரி 22 அன்று நள்ளிரவு 1 மணியளவில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்ம அறிவிப்பு! கட்டுப்பாடுகளை எளிதாக்கி வெளிநாட்டினருக்கு கிரீன் சிங்னல் கொடுத்த நாடு!

இந்த முழு சம்பவமும் கடையில் அமைந்துள்ள கேமராவில் பதிவானது, அதனை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் வலைத்தளங்களில் பார்த்து கருத்து கூறி வருகின்றனர்.

இந்த சம்பத்தை அடுத்து, 27 வயதுடைய நபரும் 34 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.

அதில் ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அட! இப்படியும் மோசடி கும்பல் செயல்படுமா… போலீசிடம் எப்படி தகவல் தெரிவிப்பது? – வாங்க தெரிஞ்சிப்போம்!