தெம்பனிஸ் மாலின் மேற்கூரையில் இருந்து விழுந்த இந்திய ஊழியர் மரணம்..!

Cleaner dies after falling through false ceiling at Tampines Mall

Cleaner dies after falling through false ceiling at Tampines Mall : தெம்பனிஸ் மாலில் கடந்த சனிக்கிழமை (ஜன. 25) தவறுதலாக மேற்கூரையில் இருந்து விழுந்த இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

கிளீனிங் எக்ஸ்பிரஸ் (Cleaning Express) நிறுவனத்தில் பணிபுரிந்த இந்திய நாட்டை சேர்ந்த அவர், மாலின் நான்காவது மாடியில் உள்ள மேற்கூரை முற்றத்தின் ஒரு நடைபாதையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​​தவறுதலாக மூன்றாவது மாடியின் கீழே விழுந்தார்.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ்; மேலும் மூன்று பேரை உறுதிப்படுத்திய சிங்கப்பூர்…!

அதன் பிறகு, 26 வயதான அந்த ஊழியர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக அங்கு அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக மனிதவள அமைச்சகம் (MOM) வெள்ளிக்கிழமை இன்று தெரிவித்துள்ளது.

மேலும், முற்றத்தின் மேற்கூரை மேலே உள்ள அனைத்து துப்புரவு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் MOM கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் உட்பட பல சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்; ஆடவருக்கு 35 ஆண்டு சிறை..!

அதிகாலை 1.25 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான முத்தரப்பு குழு (WSH) ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, நான்கு பணியிட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன என்றும் WSH கூறியுள்ளது.

Source : CNA