சிங்கப்பூரில் 19 வயது பெண் கொலை வழக்கு: பெண்ணின் சகோதரர் மீது குற்றச்சாட்டு.!

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

சிங்கப்பூரில் கடந்த மே மாதம் 4ம் தேதியன்று கிளமெண்டி (Clementi) வெஸ்ட் ஸ்டீரீட்-1 பிளாக் 602-ல் நடந்த 19 வயது பெண்ணின் மரணம் தொடர்பான வழக்கில் பெண்ணின் சகோதரர் மீது கொலை குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவத்திற்கு முன்னர், அந்த ஆடவர் சகோதரியைக் கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தற்போது இது கொலை குற்றச்சாட்டாக மாற்றப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியல்.!

ஹுவாங் போகேன் (Huang Bocan) என்ற அந்த 29 வயது ஆடவர் தமது 19 வயது சகோதரி ஹுவாங் பௌயிங்கை (Huang Baoying) கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

ஹுவாங் போகேனுக்கு உதவிய சந்தேகத்தில், 41 வயது பெண் மற்றும் 62 வயது ஆடவர் மீதும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையோ அல்லது பிரம்படியுடன் ஆயுள் தண்டனையோ விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்து டூரியான் பழம் பறிக்க முயன்ற 11 பேர் கைது.!