சிங்கப்பூரில் ஐந்து போதைப்பொருள் சந்தேக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) இன்று (நவம்பர் 17) தெரிவித்துள்ளது.
இந்தியா-சிங்கப்பூர் விமானங்களின் குளிர்கால அட்டவணை: ஏர் இந்தியா.
இதில் 19 முதல் 34 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர், இவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள்.
இதில் கிட்டத்தட்ட S$410,000 மதிப்புள்ள போதைபொருட்களின் வகைகளையும் CNB அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும், அதனுடன் S$18,250 ரொக்கம் மற்றும் தர்பூசணி கத்திகள் மற்றும் ஒரு பேஸ்பால் பேட் உள்ளிட்ட பல ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
லிட்டில் இந்தியாவில் சோம் சாலை (Somme Road) அருகே CNB அதிகாரிகள் 34 வயது நபரை நேற்று கைது செய்தனர்.
கூடுதலாக, கைது செய்யப்பட்ட ஆடவரின் மறைவிடத்தில், பல்வேறு போதைப்பொருட்கள் மற்றும் S$14,000 ரொக்கமும் கைப்பற்றப்பட்டன.
மேலும் மூவர் பாலஸ்டியர் ரோடு (Balestier Road) பகுதியில் பிடிபட்டனர். மேலும், யீஷுன் ரிங் ரோடு (Yishun Ring Road) பகுதியில் 25 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர்கள் அனைவரின் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்த தனது செல்லப் பூனை…பிரியமுடியாமல் கதறி அழும் ஆடவரின் வைரல் காணொளி