உயிரிழந்த தனது செல்லப் பூனை…பிரியமுடியாமல் கதறி அழும் ஆடவரின் வைரல் காணொளி!

Malaysian man cries when pet cat dies
Malaysian man cries when pet cat dies (Photo: CikChaaChaa/Twitter)

மலேசியாவில் ஆடவர் ஒருவர், உயிரிழந்த தனது செல்லப் பூனையின் சடலத்தை கையில் வைத்துக்கொண்டு ஆழ்ந்த துக்கத்தில் கண்கலங்கும் காணொளி வைரலாகி வருகிறது.

கடந்த நவம்பர் 14ஆம் தேதி அன்று ட்விட்டரில் வெளியிடப்பட்ட அந்த காணொளி அனைவராலும் பகிரப்பட்டும், அனுதாபம் கூறப்பட்டும் வருகிறது.

சிங்கப்பூரில் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த காணொளியில், ஆடவர் உயிரிழந்த தனது பூனையின் உடலை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே அழுதுகொண்டே செல்கிறார்.

இது காண்போர் மனதை துன்பத்தில் ஆழ்த்தும் அளவிற்கு அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பலர் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

பின்னர் அவர் வீட்டின் வளாகத்திற்கு சென்று புல்வெளி பகுதியில், பிரார்த்தனை செய்து, பூனையை அடக்கம் செய்யத் தொடங்குகிறார்.

மிலோ (Milo) என்ற அந்த பூனை, அவரின் குடும்பத்துடன் ஆறு ஆண்டுகளாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது தந்தையும் மிலோவும் “பிரிக்க முடியாதவர்கள்” என்று அவரின் மகள் குறிப்பிட்டுள்ளார்.

மிலோவின் இறப்பிற்கு காரணம் என்ன என்பது தெளிவாகத் குறிப்பிடப்படவில்லை.

சிங்கப்பூரில் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியின் வானிலை நிலவரம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…