கடந்த ஆண்டு இணைய செயலி ஒன்றில் வழியாக 15 வயது இளையரை ஆடவர் ஒருவர் சந்தித்தார், ஒவ்வொரு முறையும் பாலியல் சேவைகளை வழங்க தோராயமாக S$200 கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இருவருக்குமான இந்த உரையாடல் டெலிகிராம் என்ற மெசேஜிங் செயலிக்கு நகர்ந்தது, அங்கு அவர்கள் பாலியல் சார்ந்த பொம்மையைப் பயன்படுத்துவதைப் பற்றி பேசியதாக கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கடல்சார் துறையில் வேலை வாய்ப்பு!!!
இறுதியில் அவர்கள் நேரில் சந்திக்க தயார் ஆனார்கள், அதாவது உடலுறவில் ஈடுபடுவதற்காக ஆடவருடைய வீட்டில் அவர்கள் சந்தித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளையர் ஒருவருடன் பாலியல் செயலில் ஈடுபட்டதாகவும், 21 வயதுக்குட்பட்ட பெண்ணுக்கு ஆபாசமானவற்றை அனுப்பியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், 57 வயதுடைய அந்த ஆடவருக்கு 10 மாதங்கள் மற்றும் நான்கு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆபாசமான படங்களை வைத்திருந்தது உட்பட இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
டெலிகிராம் மூலம், அந்த ஆடவர் நான்கு ஆபாசமான படங்களை அவருக்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவுகள் விநியோகம்