கடல்சார் தொழில்துறையில் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைதொழில் மாற்றத் திட்டத்தைப் பயன்படுத்தி 300 நபர்கள் வரை வேலை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை போக்குவரத்துக்கான மூத்த அமைச்சர் சீ ஹாங் டாட் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 13) அன்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவுகள் விநியோகம்
துறைமுக செயல்பாட்டு மேலாளர், கப்பல் ஆய்வாளர், உதவி தொழில்நுட்ப கண்காணிப்பாளர் மற்றும் கப்பல் முகவர் போன்ற வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு ஆர்வமுள்ள நபர்களை மேம்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சனிக்கிழமையன்று நடந்த Maritime Singapore Connect Maritime Digital Challenge என்ற இறுதி நிகழ்ச்சியில் திரு சீ பேசினார்.
அப்போது, பிற தொழில்களில் இருந்து திறன்களையும் அறிவையும் கொண்டு வரும் நபர்களுக்கு கடல்சார் துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.
வேலை மாறும் ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு MOM அப்டேட்