பல லட்சக்கணக்கான மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த கலைஞன் வடிவேல் பாலாஜி..!

Condolence for the demise of vadivel balaji
Condolence for the demise of vadivel balaji

பல லட்சக்கணக்கான மக்களை சின்னத்திரை வாயிலாக வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த கலைஞன் வடிவேல் பாலாஜி, இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

தமிழ் சின்னத்திரையில், விஜய் டிவி புகழ் வடிவேல் பாலாஜி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதுகாப்பு விதிகளை மீறிய 7 உணவகங்களின் மீது நடவடிக்கை..!

அவரின் இறப்பு தமிழ் ரசிகர்கள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் அவருக்காக பலர் துக்கம் தெரிவித்தும், அவரின் காணொளிகளை பகிர்ந்தும் வருகின்றனர்.

நமது இணையதள முகநூல் நேரலையில், வெளிநாடுகளில் தமக்கு பிடித்த நாடு சிங்கப்பூர் என்று கூறியிருந்தார். மேலும், இந்த கொரோனா தொற்று சூழலில் அனைவரும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நமக்கு ஆறுதல் கலந்த தன்னம்பிக்கையும் அவர் வழங்கினார்.

நம்பமுடியவில்லை!! உங்களின் முதல் Live சிங்கப்பூர் தமிழ் மக்களுக்காக வழங்கிய #TamilMicsetSingaporeTeam மறக்காது ? RIP அண்ணா

Posted by Tamil Micset Singapore on Thursday, September 10, 2020

“நாம வரும் போது ஒன்னும் கொண்டு வரல, போகும் போதும் ஒன்னு கொண்டு போக போறது இல்ல”… “பொறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இந்த வாழ்க்கைல எல்லாரையும் சந்தோசமா வச்சிருப்போம்” இதலாம் வடிவேலு பாலாஜி நம்ம சிங்கப்பூர் தமிழ் மக்களுக்கான நேரலையில் கூறிய வார்த்தைகள், இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. என்றும் எங்கள் நினைவில் நீங்கள்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு S$300,000 அதிகமான நிதி திரட்டு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…