பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக அடுத்த 2 மாதங்களுக்கு சோதனையை வலுப்படுத்த மனிதவள அமைச்சகம் (MOM) முடிவு செய்துள்ளது.
அதாவது பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக அமைச்சகம் அதன் தணிக்கை சோதனையை 50 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக கூறியுள்ளது.
விபத்துகள் அதிகம் ஏற்படும் கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகளில் கண்காணிப்பை வலுப்படுத்த அமலாக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
விபத்துகளை கட்டுப்படுத்த MOM உயர் கண்காணிப்பு காலத்தை 9 மாதங்கள் நடைமுறைப்படுத்தியது.
அது கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், சில நடவடிக்கைள் தொடரும் என்றும் கூடுதலாக சில திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் பாதுகாப்பு குறித்த கண்காணிப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் கூட சில கட்டுமான தளங்களில் விதிமீறல்கள் இருக்கத்தான் செய்கிறது என்பதை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்