கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர உதவும் நோக்கில் சீனா 500,000 அறுவை சிகிச்சை முகக் கவசங்களையும், 100,000 KN95 முகக் கவசங்களையும் சிங்கப்பூரின் தேசிய இருப்புக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
சிங்கப்பூருக்கான அதன் தூதர் ஹாங் சியாயோங் (Hong Xiaoyong), சுகாதார அமைச்சில் (MOH) சிங்கப்பூரின் மூத்த சுகாதாரத் துறை அமைச்சர் லாம் பின் மினுக்கு (Lam Pin Min) அந்த முகக் கவசங்களை இன்று (மே 5) வழங்கினார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம்..!
இந்த நாளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உதவி மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது என்று அமைச்சகம் இந்த உதவிக்கு நன்றியை தெரிவித்துள்ளது.
சீனா சிங்கப்பூரின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய மாதங்களில், சீனா பல நாடுகளுக்கு இதுபோன்ற பொருட்களை வழங்கியுள்ளது.
குறிப்பாக இத்தாலிக்கு மில்லியன் கணக்கான முகக் கவசங்களையும் மேலும் மருத்துவர்களின் குழுக்களையும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 3 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!