சிங்கப்பூரில் கோவிட்-19 காரணமாக மேலும் 9 பேர் உயிரிழப்பு

(Photo: Tan Tock Seng Hospital/ Facebook)

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று காரணமாக மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இவர்களில் ஆறு சிங்கப்பூர் ஆண்கள் மற்றும் மூன்று சிங்கப்பூர் பெண்கள் அடங்குவர், அவர்கள் 52 மற்றும் 98 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

“சிங்கப்பூர்-சென்னை-திருச்சி” இடையே கூடுதல் விமான சேவை

அவர்களில், ஆறு பேர் கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, 2 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

மீதமுள்ள ஒருவர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

அவர்களில் எட்டு பேருக்கு பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது..

அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒருவருக்கு மருத்துவ பிரச்சனைகள் எதுவும் இல்லை.

மொத்தமாக, சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று காரணமாக 192 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆடவருடன் குளியலறை டிக்டாக் காணொளி – வீட்டுப் பணிப்பெண் மீது குற்றச்சாட்டு