சிங்கப்பூரில் கோவிட்-19 “ATM”… வேற லெவல் – அப்படி அதன் பயன் தான் என்ன?

Credit: GAVIN FOO

உள்ளூர் நிறுவனம் ஒன்று புதிதாக கோவிட்-19 “ATM” இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. ATM என்றவுடன் பணம் எடுப்பதற்காக என்று நினைத்து விட வேண்டாம்.

இது சுயமாக மேற்கொள்ளும் கோவிட்-19 ART சோதனையை கண்காணிக்கவும் சரிபார்க்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

மசாஜ் பார்லரில் பணிபுரியும் பெண்களின் தவறான செயல்… கட்டாயப்படுத்தியதாக போலீசை அழைத்த இரு ஆடவர்கள்!

இந்த இயந்திரம், சப்ளை நிறுவனமான டிஜிட்டல் லைஃப் லைனால் உருவாக்கப்பட்டது, மேலும் இது இங்குள்ள இரண்டு தனியார் சுகாதாரப் பராமரிப்பு குழுமங்களுடன் சோதிக்கப்பட உள்ளது.

அவை, ராஃபிள்ஸ் மெடிக்கல் குழுமம் மற்றும் ஃபுல்லர்டன் ஹெல்த் குழுமம் ஆகும். அவைகளின் நிலையங்களில் அளவிடுதலுக்காக சோதிக்கப்பட உள்ளது அந்த இயந்திரம் என தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

மேலும், திட்டத்தின் சாத்தியக்கூறுகளை இன்னும் ஆராய்ந்து வருவதாக ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதேபோல், புல்லர்டன் ஹெல்த் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்; இயந்திரத்தின் நம்பகத்தன்மை மற்றும் விரிவுப்படுத்தலை மதிப்பிடுவதாகக் கூறினார்.

ஏற்கனவே இதில் ஒரு இயந்திரம், ரஃபிள்ஸ் சிட்டியில் உள்ள ஃபுல்லர்டன் ஹெல்த் பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

எல்லைகளை மீண்டும் திறப்பது சிங்கப்பூரின் கடமை; துணை பிரதமர்.!