சிங்கப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) நிலவரப்படி, புதிதாக 845 பேருக்கு COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள் 587 பேர் அடங்குவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார அமைச்சின் (MOH) சமீபத்திய தொற்று புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் சிங்கப்பூரில் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கையை 838ஆக உயர்ந்துள்ளது.
புதிய பாதிப்பு விவரம்:
- உள்ளூர் அளவில்: 258
- சமூக அளவில்: 242
- வெளிநாட்டு ஊழியர் விடுதியில்: 16
ஞாயிற்றுக்கிழமை புதிதாக 327 பேருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள் 218 பேர் மற்றும் உள்ளூர் அளவில்109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா செல்லும் பயணியா நீங்க? – தொற்று ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டது “இந்தியா”