COVID-19: சிங்கப்பூரில் ஏழாவது நபர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம் (MOH)..!

COVID-19: seventh death reported in Singapore 
COVID-19: seventh death reported in Singapore 

சிங்கப்பூரில் COVID-19 தொற்று காரணமாக ஏழாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

உயிரிழந்த அவர், 86 வயதான சிங்கப்பூர் பெண்மணி. சம்பவம் 987ஆக சிங்கப்பூரில் உறுதி செய்யப்பட்டவர். Lee Ah Mooi முதியோர் இல்ல குழுவுடன் தொடர்புடையவர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் புதிதாக 198 பேர் பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 2,108ஆக உயர்வு..!

நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 9) இரவு COVID-19 தொற்று காரணமாக ஏற்பட்ட மருத்துவ சிக்கல்களால் அவர் இறந்ததாக MOH தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அவர் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) அனுமதிக்கப்பட்டார், அதே நாளில் COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

NCID அவரின் குடும்பத்தினரை அணுகியுள்ளது, மேலும் அவர்களுக்கு உதவிகளையும் வழங்கி வருகிறது, என்று MOH கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை COVID-19 தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு S$345,000 நன்கொடை அளித்த சிங்கப்பூரர்கள்..!