தங்கும் விடுதிகளில் புதிய 2 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!

COVID-19: Two new clusters were also identified at a dormitories
COVID-19: Two new clusters were also identified at a dormitories (Nuria Ling/TODAY)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 350 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 24,559 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்தவர் மரணம் – மொத்தம் 25ஆக உயர்வு..!

மேலும் 308 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 12,635 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் புதிய 2 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை,

  • Beyond Tuas South Boulevard
  • 10 Kwong Min Road

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் சிறப்பு விமானங்களின் கட்டண விவரம்..!