சிங்கப்பூரில் உள்ள அனைத்து சிங்கப்பூரர்கள் மற்றும் நீண்டகால குடியிருப்பாளர்களுக்கு COVID-19 தடுப்பூசிகளை இலவசமாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் குழு, வயது வந்தோர் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது, ஆனால் தடுப்பூசிகளை தானாக முன்வந்து போட்டுக்கொள்ள வேண்டும், என்றார்.
சிங்கப்பூரில் சுமார் 450,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொடர்பு கண்டறியும் சாதனங்கள்!
தடுப்பூசி வழங்கப்படும்போது, அதனை போட்டுக்கொள்ள ஊக்கமளிப்பதாக அவர் கூறினார்.
ஏனென்றால், தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது, நீங்கள் உங்களை மட்டும் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்று திரு. லீ கூறினார்.
தடுப்பூசிகளுக்கு முதல் முன்னுரிமை, சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள், முதியவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வழங்கப்படும், என்றார்.
மீதமுள்ள மக்களுக்கு படிப்படியாக தடுப்பூசி போடவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி போட விரும்பும் அனைவரையும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்ற நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக, பிரதமரும் அவரது சகாக்களும், மேலும் வயதானவர்களும், ஆரம்பத்தில் தடுப்பூசி போட உள்ளதாக திரு லீ குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் 3ஆம் கட்டம்: வெளிநாட்டு ஊழியர்களுக்கு…!