சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டுடியோவில் இடிக்கும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கட்டுமான நிறுவனத்தின் கிரேன் ஒன்று நேற்று சனிக்கிழமை கவிழ்ந்தது.
அன்று மாலை 4.50 மணியளவில், கிரேன் விழுந்தது தொடர்பான அந்த வீடியோ பேஸ்புக்கில் வெளியானது.
ஜூரோங் ஈஸ்ட் MRT ரயில் நிலையத்தில் ஆடவர் செய்த செயல்: கடுப்பான நெட்டிசன்கள்… போலீசில் புகார்
ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தளத்தில் இருந்த விருந்தினர்கள், குழு உறுப்பினர்கள் அல்லது ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை.
இது குறித்து செய்தி சேகரிக்க மனிதவள அமைச்சகத்தை (MOM) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்பு கொண்டது.
கடந்த வாரம், இரண்டு ஊழியர்கள் பணியில் இருந்தபோது உயிரிழந்தனர்.
இந்த 2022 ஆண்டு மட்டும் வேலையிட இறப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
உறவினரை பார்க்க சென்றபோது நேர்ந்த சோகம் – சாலையை கடக்கும்போது டாக்ஸி மோதி ஆடவர் மரணம்