ஆர்ச்சர்ட் சாலை வழியே சென்ற பொதுமக்கள் பலரை காகங்கள் தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஆர்ச்சர்ட் சென்ட்ரல் ஷாப்பிங் மாலுக்கு வெளியே நேற்று முன்தினம் (அக் 24) மதியம் 1.15 மணியளவில் நடந்ததாக Stomp வாசகர் கூறியுள்ளார்.
பணிப்பெண்ணை தீர்த்துக்கட்டி சொந்த நாட்டுக்கு தப்பி ஓட்டம்.. வெளிநாட்டு ஊழியரை தேடிவரும் இன்டர்போல்
அவரின் சகோதரி எடுத்த வீடியோக்களை ஸ்டாம்ப் தளத்துடன் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில் ஒரு காணொளியில், ஒரு நிமிட இடைவெளியில் அவ்வழியாக சென்ற மூன்று நபர்களை காகம் தாக்குவதைக் காண முடிந்தது.
மேலும், இந்த காணொளிகளை பதிவு செய்வதற்கு முன்னர் காகம் தாக்கியதில் ஒருவரின் காதில் இருந்து ரத்தம் வழிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் அப்பகுதியில் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த காணொளிகளை பகிர்வதாக அவர் கூறினார்.
அதிகாரிகள் ஏதாவது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எண்ணத்தில் அவர் இதை பகிர்ந்துள்ளதாக சொன்னார்.
காகங்கள் தங்கள் குஞ்சுகள் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்தால் அவ்வாறு தாக்கலாம், பொதுவாக தங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்கவே அவை பொதுமக்களை தாக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
வெறும் S$1 வெள்ளிக்கு விமான பயணம்.. சிங்கப்பூரில் இருந்து 6 இடங்களுக்கு பயணிக்கலாம்