சிங்கப்பூர்: அழுகிய மற்றும் தொங்கி நிலையில் 36 வயதுமிக்க ஆடவர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் பிப். 26, அன்று கண்டெடுக்கப்பட்டது.
பிளாக் 560 ஆங் மோ கியோ அவென்யூ 10 க்கு அருகில் உள்ள நடைபாதை பாதுகாப்பு கம்பியில் அந்த சடலம் கண்டறியப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனி.. சிங்கப்பூரர்கள், PR-களுக்கு தனி.. சாங்கி ஏர்போர்ட் பயணிகள் அப்டேட்
பாதுகாப்பு கம்பியில் உச்சியில், கழுத்தில் கயிறு கட்டப்பட்டு தொங்கிய நிலையில் அவர் காணப்பட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.
சடலம் தோராயமாக இரண்டு நாட்கள் தொங்கிய நிலையிலேயே இருந்து இருக்கலாம் என்று அலுவலக ஊழியர் ஒருவர் கூறினார்.
திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த ஷின் மின் நிருபர் கூறுகையில், சடலம் கண்டெடுக்கப்பட்ட சாலை குறுகலான மற்றும் ஒதுக்குப் புறமாக இருந்தது, இதனால் உடலைக் கண்டறிவது கடினமாக இருந்திருக்கலாம் என குறிப்பிட்டார்.
இயற்கைக்கு மாறான இந்த மரணம் குறித்து போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
அவர் யார் என்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.