பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்தில் 69 வயதான ஆடவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் சிதைவடைந்ததால் துர்நாற்றம் வீசத் தொடங்கியதாகவும், அதை பக்கத்தில் உள்ள மொத்த வியாபாரிகள் கண்டுபிடித்ததாகவும், ஷின் மின் டெய்லி செய்தி தெரிவித்துள்ளது.
குப்பை சேகரிப்பு அறையில் இறந்து கிடந்த ஊழியர் – தொடரும் விசாரணை
அவரின் உடல் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி மாலை 5:26 மணிக்கு மொத்த விற்பனை நிலையத்தில் பிளாக் 10ல் கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்தவர் முன்பு சுமார் 20 ஆண்டுகளாக காய்கறி மொத்த விற்பனையாளராக இருந்தார் என்று மொத்த விற்பனை நிலையத்தின் அவரது முந்தைய முதலாளி கூறினார்.
மேலும், தனது வியாபாரத்தை நிறுத்திய பின்னர் நிலையத்தில் உள்ள மற்ற மொத்த விற்பனையாளர்களுக்காக அவர் தொடர்ந்து பணியாற்றினார் என்றும் கூறியுள்ளார்.
அந்த நபர் அசைவில்லாமல் கிடந்ததாகவும், இயற்கையான காரணங்களால் இறந்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.