தீபாவளி பண்டிகையையொட்டி, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் (Sri Senpaga Vinayagar Temple) நேற்று (நவ.12) விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டும், அலங்காரம் செய்யப்படும், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நாள் முழுவதும் நடைபெற்ற பல்வேறு பூஜைகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிங்கப்பூர் மனிதவளத்துறை அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் (Minister for Manpower, Dr Tan See Leng), ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்திற்கு வருகை தந்தார். அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, விநாயகரை தரிசனம் செய்த அமைச்சருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், ஆலயத்தில் இருந்த பக்தர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
சிங்கப்பூரில் இருந்து 795 கிராம் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்!
தீபாவளி தினத்தன்று மட்டும் சுமார் 2,000- க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகைத் தந்ததாகக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலய நிர்வாகம், பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.