சிங்கப்பூரில் இருந்து 795 கிராம் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்!

சிங்கப்பூரில் இருந்து 795 கிராம் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்!
Photo: Trichy Customs

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை திருச்சி மண்டல வான் நுண்ணறிவுப் பிரிவுச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தீபாவளி இரவில் ஏற்பட்ட சண்டை.. ஆடவர் ஒருவர் மருத்துவனையில் அனுமதி – ஒருவர் கைது

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவுப் பிரிவுச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பயணி ஒருவரின் நடவடிக்கையைக் கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரைத் தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.

பேண்ட் பெல்ட் போடும் இடத்தில் மறைந்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுமார் 100 கிராம் மதிப்பிலான ஏழு தங்கக்கட்டிகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் இருந்த 95 கிராம் தங்க நகையையும் பறிமுதல் செய்துள்ளனர்.

வெளிநாட்டு பணிப்பெண்ணை தன் சொந்த செலவில் சுற்றுலா அனுப்பிய சிங்கப்பூர் முதலாளி – “நான் அதிஷ்டசாலி” என மகிழ்ச்சி

அதைத் தொடர்ந்து, அந்த பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.