தீபாவளி இரவில் ஏற்பட்ட சண்டை.. ஆடவர் ஒருவர் மருத்துவனையில் அனுமதி – ஒருவர் கைது

68-suspected-drug-offenders-arrested
PHOTO: Lianhe Zaobao

கெலாங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சண்டையில் ஈடுபட்டதாக 32 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக அந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியருக்கு சட்டவிரோத முறையில் உதவி செய்த ஆடவருக்கு S$5,000 அபாரதம்

38 லோரோங் 25 கெய்லாங் அருகே நேற்று இரவு 8.15 மணியளவில் நடந்த சண்டை குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் (SCDF) காவல்துறைக்கும் தகவல் கிடைத்தது.

இந்த சண்டையில் 46 வயது ஆடவருக்கும் தொடர்பு இருப்பதாக சீன செய்தி நிறுவனமான Lianhe Zaobao கூறியுள்ளது.

32 வயதான ஆடவர், 46 வயதான ஆடவரை கத்தி கொண்டு தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

இதனால் காயமடைந்த ஆடவர், சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதில் இன்னொருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாக SCDF தெரிவித்தது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

கால்கள் நொண்டியவாறும், கைத்தடிகள் உதவியுடனும் தீபாவளியை கொண்டாடிய வெளிநாட்டு ஊழியர்கள்