Foreign workers Deepavali in Singapore: தாற்காலிகமாக வேலையில்லாமல் இருந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூர் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் சர்ப்ரைஸ் வழங்கி மகிழ்வித்தது.
மெக்டொனால்ட்ஸ் மற்றும் மைக்ராண்ட் X மி ஆகியவை இணைந்து ஊழியர்களை மகிழ்வித்ததாக தமிழ் முரசு கூறியுள்ளது.
இதனால் விபத்து ஏற்பட்டு தாற்காலிகமாக வேலையிழந்து இருக்கும் 25 வெளிநாட்டு ஊழியர்கள் பலனடைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த ஊழியர்கள் அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், மனசோர்வு அடைந்திராமல் இருக்க இதுபோன்ற நிகழ்வுகளில் மைக்ராண்ட் அமைப்பு ஈடுபடுத்துவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இதில் அவர்கள் விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்ந்தனர் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்நிகழ்வில், ஊழியர்களுக்கும், வசதி குறைவான மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கும் 3,000 உணவு வவுச்சர்கள் வழங்குவதாகவும் உணவகம் கூறியது.
கால்கள் நொண்டியவாறும், கைத்தடிகள் மூலமும் சில வெளிநாட்டு ஊழியர்கள் அங்கு வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
தன் குடும்பத்துக்காக தன்னையே தொலைக்கும் ஓர் அதிசய பிறவிதான் இந்த வெளிநாட்டு ஊழியர்கள்.