தீபாவளி பண்டிகையையொட்டி, வழங்கப்பட்ட பீட்சா, சமோசாக்கள்….புன்னகையுடன் பெற்றுக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள்!

தீபாவளி பண்டிகையையொட்டி, வழங்கப்பட்ட பீட்சா, சமோசாக்கள்....புன்னகையுடன் பெற்றுக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: ItsRainingRaincoats

 

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ‘ItsRainingRaincoats’ என்ற அமைப்பு, சிங்கப்பூரில் தங்கிப் பணிபுரிந்து வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பல்வேறு உதவிகளை தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களுடன் இணைந்து செய்து வருகிறது.

லாரி, சிற்றுந்து மற்றும் பைக் விபத்து: 27 வயதுமிக்க ஆடவர் மரணம் – பயணி ஒருவர் கைது

அந்த வகையில், வரும் நவம்பர் 12- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படவுள்ள நிலையில், சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சமோசாக்கள் மற்றும் பீட்சாக்கள் வழங்கப்பட்டது. இதனை புன்னகையுடன் வெளிநாட்டு ஊழியர்கள் பெற்றுக் கொண்டு, சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

லிட்டில் இந்தியா செல்லும் ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பீட்சா மற்றும் சமோசா உணவுகளை வழங்க உதவிய நன்கொடையாளர்கள் Pizza Hut Singapore, Gourmet Ready, AltPizza, LGT Bank Singapore ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ‘ItsRainingRaincoats’, உணவுகளை விநியோகம் செய்தவர்களுக்கும், அதற்கு உதவிய வாகன ஓட்டுநர்களுக்கும் மனதார நன்றியைத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிங்கப்பூர் சுற்றிலும் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இந்த பீட்சாக்கள் மற்றும் சமோசாக்கள் வழங்கப்பட்டதாக ‘ItsRainingRaincoats’ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.